ஒல்லியாகனும் , குண்டாகனும் !!!
---------------------------------
குண்டான ஒருவனும்
ஒல்லியான ஒருவனும்
சந்தித்து கொண்டார்கள்.
"குண்டாவது எப்படி ?"
ஒல்லியானவன் கேட்டான் .
குண்டானவன் மூன்று
வேலையும் சாப்பிட
வேண்டியதை சொன்னான்.
சரி , "ஒல்லியாவது எப்படி ?"
குண்டானவன் கேட்டான் .
ஒல்லியானவன் சொன்னான்
"காதல் செய் அல்லது
கவலை படு ".
அம்மாவும் , சாக்லேட்டும் !!!!!!
--------------------------------
அன்புள்ள அம்மாவுக்கு ,
எவ்ளோ அடம்பிடிச்சாலும்
ஒரு சாக்லேட்டுக்கு மேல்
வாங்கி தராத அப்பா
இப்போலாம் நிறைய
சாக்லேட் வாங்கி தருகிறார் ;
சாமிகிட்ட போன உன்னை மறக்க .
எனக்கு சாக்லேட் வேண்டாம்மா
நீதான் வேணும் .
சீக்கிரம் இங்க வாம்மா !!!
சுவாரசியங்கள் ........

உன்னிடம் சொல்லும் வரை
எந்த ஒரு சுவாரசியமும்
எனக்கு சுவாரசியமாக
தெரிவதில்லை ........
உனக்காக நிறைய
சுவாரசியங்கள் காத்திருக்கின்றன
மிகவும் சுவாரசியமாக .........

.........................................

உன் விரல் துடைத்த
என் ஒரு துளி கண்ணீருக்காக
ஆயுள் முழுதும் உன்னை அழாமல்
நான் பார்த்து கொள்கிறேன் -
என் அன்புக்குரிய தோழியே !!!

.........................................
மௌனங்கள் ......

உன் மௌனங்கள்
எனக்கு பழக்கம் ...
நீ பேசும் வார்த்தைகள்தான்
எனக்கு புரியவில்லை !!!!!!

.........................................

என்னை யாரிடமும்
நீ விட்டுகொடுதததில்லை ...
உன்னை விட்டுகொடுத்தேன்
உனக்காக ........

.........................................

கண்கள் வேறு எங்கோ
நிலைகுத்தி இருந்தாலும்....
உள்ளம் என்னவோ
நீ இருக்கும் திசை
நோக்கியே இருக்கிறது.....

...............................
Tamil Radio
1/13/2009 08:47:00 AM | Author: