எதிரே வந்தவள் ....
11/26/2008 01:51:00 PM | Author:
எதிரே வந்தவள் ....

அவள் என் எதிரில் ..
உடன் அவர்
அவர் தாத்தாவாக இருக்கலாம்

கண்கள் அவளை பார்க்கிறது
இந்த கண்கள் என்னுடையது ..
கண்கள் என்னை பார்க்கிறது ..
இந்த கண்கள் அவளுடையது ..

ஒரு புன்னகை வருகிறது லேசாக
இந்த புன்னகை அவளுடையது ..
ஒரு வியப்பு வருகிறது ( நிஜமாவா !?!?! )
இந்த வியப்பு என்னுடையது

என்னின் எதிரே அவளில்லை
அவளின் எதிரே நானில்லை
பாதை கடந்தது
அவளும் அவரும் மறைந்தனர்

திரும்பலாமா ? திரும்பி பார்..
மனசு சொன்னது ...
ஒன்று என்னுடையது
ஒன்று அவளுடையது

திரும்பி பார்த்தோம்
ஒரே நேரத்தில் ..
சிரித்து கொண்டோம் ..
ஒரே நேரத்தில் ..

போய் வா பெயர் தெரியா தோழியே ..
மீண்டும் எதிரில் வர கடவோம் .....

அருண் . ஜெ
|
This entry was posted on 11/26/2008 01:51:00 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

1 கருத்துக்கள்:

On May 6, 2009 at 6:33 PM , Anonymous said...

ezhuthu ungaludaiyadhu...athai yethirkonda vitham ennudaiyadhu....kavithai ungaludaiyathu...athai rasithavitham ennudaiyadhu....innum ezhuthungal vaasiga varugiren.....