வெள்ளிக்கிழமை தேவதை


தூங்கும் போதும்
கண்ணை விட்டு
அகலா அழகு

சோம்பி நிற்கும் கோயில்
சிலையும் ஆவலுடன்
காத்திருக்கும் உன்
வருகைக்கான அழகு

கோலம் போடும் தரையும்
தரைபெறும் கோலமும்
உனக்காக ஒன்றுடன் ஒன்று
மோதிக் கொள்ளும் அழகு

சின்னக் குழந்தையும்
உன் கன்னம் தொட்டு
சிரித்துப் பார்க்கும் அழகு

சனி முதல் வியாழன்
வரை இல்லாத அழகு
வெள்ளிக்கிழமை அதிகாலைகளில்
மட்டும் உனக்கு வருவது எப்படி?



அபி.ஜெ
|
This entry was posted on 11/26/2008 02:10:00 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 கருத்துக்கள்:

On May 6, 2009 at 6:31 PM , Anonymous said...

azhagu avalil illai avalpaal ungalin kathalil azhagu...aval mel ungal anbatha azhagu.....athai kavithaiai sonnadhu azhagilum azhagu...

 
On May 14, 2009 at 8:43 PM , sakthi said...

சனி முதல் வியாழன்
வரை இல்லாத அழகு
வெள்ளிக்கிழமை அதிகாலைகளில்
மட்டும் உனக்கு வருவது எப்படி?

kavithai alagu

 
On May 14, 2009 at 8:44 PM , sakthi said...

கோலம் போடும் தரையும்
தரைபெறும் கோலமும்
உனக்காக ஒன்றுடன் ஒன்று
மோதிக் கொள்ளும் அழகு

arumai